search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி நிறுவனம்"

    • நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.
    • முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நீலா தெற்கு வீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக ரவி (வயது 64).

    இந்த நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வாட்ஸ்அப் செயலி மூலம் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து நாகை குற்றப்பிரிவு போலீசார் எஸ்பி அலுவலகத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் ரவியிடம் கடந்த 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கட்டிய வைப்புதொகை, சீட்டு தொகை, சேமிப்பு கணக்கு தொகை சுமார் 220 கோடி ரூபாய் திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் அவருடைய மகன்கள் பாலாஜி, சிவா, செந்தில் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை பி.பி.குளம் பகுதியில் பி.டி.ராஜன் ரோடு, ஏ.வி.ஆர். காம்பிளக்சில் இயங்கி வந்த பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (பி.எம்.சி.) என்ற நிதிநிறுவனத்தை சேக் முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குநராக இருந்து கொண்டு நடத்தினார். அவர் பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக உறுதி அளித்தார். உறுதி மொழியில் கூறியது போல் லாபத்தை திரும்ப செலுத்தாததால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை டான்பிட் சிறப்பு கோர்ட்டில் எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. அதன் பின்பு மேற்கண்ட நிதி நிறுவனத்தின் மீது பணம் மோசடி செய்ததாக இதுவரை பல புகார் மனுக்கள் பெறப்பட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் ஏப்ரல் மாத இறுதிக்குள் எமது அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் நேரில் புகார் கொடுக்குமாறு முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும் தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அலுவலக தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆறுமுகம் இசைராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை-திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் அரியபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இசைராஜ்(வயது 27).

    தற்கொலை

    இவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டைக்கு அவரது உறவினர்கள் விரைந்து சென்றனர்.

    அப்போது அவர்கள் ஆறுமுகம் இசைராஜை சிலர் தற்கொலைக்கு தூண்டி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ், வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேவை குறைபாடு புகாரில் நடவடிக்கை
    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கல்பாலத்தடியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவர் தனியார் நிதி நிறுவனத்திடம் கார் கடன் பெற்றிருந்தார். இதனை மாதம் தோறும் கட்டி முடித்த நிலையில், கடன் இல்லை என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட வில்லை.

    இது பற்றி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, மேலும் கூடுதல் தொகை கட்ட வேண்டும் என கூறியதால் அதனையும் சவுந்தர்ராஜ் கட்டி உள்ளார்.

    ஆனாலும் நிதி நிறுவனம், அவரது கடனை முடிக்காமல் மேலும் பணம் கேட்டதோடு, சென்னைக்கு நேரடியாக வரவேண்டும் என்றும் கூறி உள்ளது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சவுந்தர்ராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலை வர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசா ரித்து, நிதி நிறுவன சேவை குறைபாட்டினை சுட்டி க்காட்டி, சவுந்தர்ராஜிக்கு நஷ்ட ஈடு(அபராதம்) ரூ. 1 லட்சம் வழங்க உத்தர விட்டனர். மேலும் அவரி டம் ஏற்கனவே கூடுதலாக வசூ லிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 724 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்து 724 -ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். கடன் இல்லை என்ற சான்றிதழையும் உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    • மதுரை பெத்தானியாபுரம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
    • இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை பெத்தானியா புரம் சின்னசாமி பிள்ளை தெருவில் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ''வி.எல்.சி. அக்ரோ டெக் லிமிடெட்'' என்ற நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களிடம் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    பொதுமக்களை நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பி தராமல் அவர்கள் நம்பிக்கை மோசடி செய்தனர்.

    இதுபோல் அவரது ஊரைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறும் முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணையில் இருந்து வருகிறது.

    மேற்கண்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிலையம் எதிர்புறம், மதுரை-14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டார்.
    • பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சுபாஷ். இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.

    இவர் ஜூலை மாதம் 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் .சி. புக் காணாமல் போனது தெரிய வந்தது. உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை,

    இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (வயது 24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றி சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்த 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது வெள்ளகோவிலில் ஜூலை மாதம் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு, கோணவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (38) என்பது தெரியவந்தது .உடனே மணிகண்டனை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர் மீது திருப்பூர் ஈரோடு, சேலம், மதுரை, விழுப்புரம், கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது.

    நீதிபதி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றும் ஒருவரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கூடுதல் வட்டி கேட்கும் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் டி.எஸ்.பி.யிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு கொடுத்தனர்.
    • 3 குழுவிலும் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூர ணியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ''தங்க தாமரை'' என்ற மகளிர் குழுவுக்கு தலைவியாக உள்ளார். இதேபோல் மரியா தேவி என்பவர் ''மகரம்'' குழுவிற்கு தலைவியாகவும், லட்சுமி என்பவர் ''கணிமலர்'' குழுவிற்கு தலைவியாகவும் உள்ளனர்.

    இந்த 3 குழுவிலும் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 3 குழுவிற்கும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற தாகவும், அந்த கடனை முழுமையாக கட்டி விட்டதாகவும், அதற்கு தடையில்லா சான்று கேட்டபோது நிதி நிறுவனத்தின் மேலாளர் மேலும் நீங்கள் பணம் கட்ட வேண்டும்.

    இல்லை என்றால் கூடுதலாக கடன் வாங்க வேண்டும் என்றுகூறினாராம். கூடுதலாக கடன் வாங்க இல்லையென்றால் தடையில்லா சான்று வழங்க முடியாது என்றும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து 3 மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள்,போலீஸ் டி.எஸ்.பி. சகாயஜோஸை சந்தித்து நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தடையில்லா சான்று பெற்று தர வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. பதில் அளித்ததின் பேரில் மகளிர் குழுவினர் கலைந்து சென்றனர்.

    • 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
    • பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.இந்தநிலையில் குழுவில் இருந்த ஒரு பெண் இறந்துவிட்டார். மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் மாதத்தவணை கட்ட காலதாமதம் ஆனதால் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    கடன் தவணை செலுத்த வந்த பெண்களிடம், கடன் தவணை செலுத்தாத இருவரின் பணத்தையும் செலுத்த கூறி மிரட்டியுள்ளனர்.இதையடுத்து வேறு இடத்தில் குடியிருக்கும் அந்த பெண்களிடம் போன் மூலம் பேசியதில் கடன் தவணை செலுத்துவதாக அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் தொகைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்களை சிறை பிடித்து வைத்திருப்பது குறித்த தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் வந்தனர்.இது குறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் இரவு நேரத்தில் இப்படி கூட்டமாக வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பூமா அக்ரோ டெக் லிமிடெட் என்ற நிதி நிறுவனங்கள் மீது, மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை
    • குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ராமவர்மபுரம் ஜவகர் 3-வது தெருவில் இயங்கி வந்த பூமா அக்ரோ டெக் லிமிடெட் என்ற நிதி நிறுவனங்கள் மீது, குமரி மாவட்ட பொருளாதார குற் றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

    ஆகவே மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.
    • கைதான தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் அப்பர் கூடலூர் கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 41). இவரது மனைவி சாரதா (35).

    இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆகாஷ் ஸ்ருதி ஸ்பைஸ் இந்தியா மற்றும் ஸ்பைஸ் இந்தியா என 2 நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர்.

    தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி தருவதாக தெரிவித்தனர். தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

    ஒரு முதலீட்டாளர் ரூ.1 லட்சம் செலுத்தினால் நிறுவனம் 24 மாதங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் திரும்ப கொடுக்கும் என்றும், 2 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தரப்படும் என்றும் அறிவித்தனர்.

    இதை நம்பி அந்த நிதி நிறுவனங்களில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். சிறிது காலம் ஊக்கத்தொகை என்ற பெயரில் அந்த நிறுவனம் வட்டி வழங்கியது. திடீரென வட்டி வழங்குவதை நிறுத்திவிட்டு நிறுவனத்தை நடத்திய துரைராஜ், சாரதா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

    இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாத்தல் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜ், சாரதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை, கோவை, ஊட்டி, சேலம், பெங்களூரு, சேலம், கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் அந்த நிறுவனத்தின் கிளைகள் மூலம் 66 முதலீட்டாளர்களிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து துரைராஜ், சாரதா ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவன கிளைகள் மற்றும் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று துரைராஜ், சாரதா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கோவையில் சிங்காநல்லூர், துடியலூர் உள்பட 4 இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, அப்பர் கூடலூர் உள்ளிட்ட 4 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும், சென்னையில் 2 இடங்களிலும் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    துரைராஜூம், அவரது மனைவியும் முதலீட்டாளர்களிடம் பெற்ற நிதியை எந்த வகையில் செலவிட்டனர், சொத்துக்கள் எதுவும் வாங்கி குவித்துள்ளார்கள், வேறு எங்காவது முதலீடு செய்துள்ளார்களா என்பதை கண்டறிவதற்காக இந்த சோதனை நடந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்றைய சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கைதான தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு
    • காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை அடுத்த கட்டையன் விளையில் இயங்கி வந்த சன்ஸ்டார் அக்ரோ பார்ம்ஸ் (இந்தியா) லிமிடெட், வின்ஸ்டார் நிதி லிமிடெட் மற்றும் வின் சன் ஸ்டார் ரிலேட்டர்ஸ் என்ற நிதி நிறுவனங்கள் மீது நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவால் 2008-12-2019-ந்தேதி வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை 26-9-2022 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாந்து, இதுவரையிலும் நாகர் கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவல கத்தில் புகார் மனு கொடுக் காதவர்கள் உடனடி யாக நாகர்கோவில் பொரு ளாதார குற்றப்பிரிவு-3 அலுவலகத்தில் வந்து புகார் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால் தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார்.
    • வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    கோவை:

    திருப்பூரில் கடந்த 2011-ம் ஆண்டு பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இந்த நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றினர். இது தொடர்பாக புகார் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    விசாரணையில் 58 ஆயிரத்து 571 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட (டான்பீட்) சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

    கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வந்தது.

    அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இரு தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால் தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார்.

    அதை தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இருதரப்பு மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு இடைக்கால தடையை நீக்கியதோடு, கோவை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பளிக்க கடந்த 5-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இது தொடர்பான உத்தரவு நகலை கடந்த 10-ந்தேதி சி.பி.ஐ.தரப்பு வக்கீல், கோவை டான்பீட் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து வழக்கில் 22-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ரவி அறிவித்தார்.

    அதன்படி 22-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்ராஜ் தரப்பில் பணம் கொடுக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை 26-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இன்று காலை பாசி மோசடி வழக்கு கோவை டான்பீட் கோர்ட்டில் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, மோசடியில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோருக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    ×